அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு .டிடிவி. தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளும் இன்று சட்டமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ராசிபுரம் சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல், அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் வீரமுழக்கம் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் ராசிபுரம் நகர கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் கா.முருகன், அவைத் தலைவர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்ட இணை செயலாளர் பத்மாவதி, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *