சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி ஊராட்சியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அ திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளைசெயலாளர்கள் முத்துராம், வெள்ளிகண்ணன், ஒன்றிய எம். ஜி. ஆர் இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஊராட்சி கழக செயலாளர் பா.கார்த்திக், கழக நிர்வாகிகள் பலராமன், ரேவதி, முருகன்,ஆறுமுகம் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்