செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் எஸ்.எஸ்.என் கல்வி குழுமம் மற்றும் சென்னையின் எப்.சி கால்பந்தாட்ட குழு இணைந்து கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் உள்ள வீரர்களை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக உருவாக்கும் விதமாக கால்பந்து பயிற்சி அகாடமி இன்று துவங்கப்பட்டது.

எஸ்.எஸ்.என் கல்வி குழும தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற பயிற்சி கால்பந்தாட்ட அகாடமி துவக்க விழாவில் இந்திய கால்பந்து வீராங்கனை மாரியம்மாள் கால்பந்தாட்ட பயிற்சினை துவக்கி வைத்தார்.

சென்னையின் எப்.சி அணி இளைஞர் மேம்பாட்டு தலைவர் கணேஷ், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் ஆகியோர் கலந்து கொண்டு கால்பந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு கருத்துரைகளை வழங்கினார்.தொடர்ந்து கால்பந்து யூ டியூபர் பிரதீபின் கால்பந்து சாகச நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.கிராமபுற மாணவர்களுக்கான கால்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் துவங்கபட்டது சீர்காழி பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *