சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள அய்யப்பநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலணி.நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.இந்நிலையில் கடந்தாண்டு ஜல்ஜீவன் திட்டத்தில் காலணியில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெருவில் 2.”.இஞ்ச் அளவு இரும்பு பைப் லையன் மூலம் சீராக குடிநீர் ஊராட்சி நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு வழங்கி வந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 40.அடி நீளமுள்ள குடிநீர் இரும்பு பைப் மற்றும் கேட்வால்வு ஆகிவைகளை அறுத்தெடுத்து திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பவுன்முருகன் காடுபட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த எஸ்.எஸ்.ஐ. குபேந்திரன் மற்றும் போலீசார் பைப் திருடர்கள் தேடி வருகின்றனர் .இத்திருட்டு சம்பவத்தால் இப்பகுதியில் குடிநீர் தடைபட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *