கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரிமா சங்கம் சார்பில் டாக்டர் சேஷன் நினைவு இலவச கண் சிகிச்சை முகாம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க தலைவர் ராஜலட்சுமி பாத்திர கடை அதிபருமான ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.

இந்த முகாம் ஏற்பாட்டினை டாக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். முகாமை மாவட்ட அரிமா சங்க தலைவரும் தொழில் அதிபருமான பி எஸ் வைரக்கண்ணு தொடங்கி வைத்தார். இலவச கண் சிகிட்சை முகாமில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ க குழுக்கள் கலந்து கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு சிகிச்சை பயனடைந்தனர். முகாமில் நிர்வாகிகள் பண்ருட்டி ஐஸ்வர்யா ராஜ்மோகன், ஸ்ரீராம் பேட்டரி ராஜசேகர், ராஜவேல், ராமச்சந்திரன், பூங்குணம் சம்பத் மகாலட்சுமி, சங்கர், சம்பங்கி, சீனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *