கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டான்மோர் சந்திப்பு பகுதியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளியில் இன்று 45 குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்
இந்நிலையில் அனைவருக்கும் உணவு சமைத்து வழங்கியுள்ளனர் அதோடு விட்டமீன் மாத்திரையும் வழங்கியதாக கூறப்படுகிறது இந்நிலையில் திடீரென 25 குழந்தைகள் வாந்தி எடுத்ததால் அச்சமடைந்து அனைவரையும் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் 8 குழந்தைகளுக்கு நீர்சத்திற்க்காக குளுக்கோஸ் செலுத்தப்பட்டது மீதமுள்ள அனைத்து குழந்தைகளும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் பள்ளிக்குழந்தைகளுக்கு இச்சம்பவம் நிகழ என்ன காரணம் என்பதை சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உரிய விசாரணை மேற்க் கொண்டு இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாதவாறு குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்