கோவை திருச்சி சாலை கிறிஸ்துநாதர் ஆலயத்தின் வாலிபர் சங்கம் சார்பாக இளம் தலைமுறையினிடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் யூத் ஃபெஸ்டிவல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.போட்டிகளை சி.எஸ்.ஐ.திருமண்டல பிஷப் கமிஷ்னரி (Bishop Commissionary) ஆயர் பிரின்ஸ் கால்வின் துவக்கி வைத்தார்.


15 திருச்சபை அணிகள் கலந்து கொண்ட போட்டியை நிர்வாக குழு உறுப்பினர் அறிவழகன் toss செய்து ஆரம்பித்து வைத்தார்,
தொடர்ந்து நடைபெற்ற கால்பந்து போட்டியில் திருச்சி சாலை சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலய அணி (Team B) வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.இரண்டாம் இடத்தை சி.எஸ்.ஐ.இம்மானுவேல் ஆலய அணி பிடித்தது.கோல்டன் பூட் இம்மானுவேல் ஆலய அணியின் சாம் மனோஜ் பெற்றார்.

போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக திருச்சி சாலை கிறிஸ்துநாதர் ஆலய திருச்சபை நிர்வாகிகள் ஆயர் ராஜேந்திர குமார்,ஆயர் சுரேஷ் குமார்,ஆயர் பிரவீன் ஜெபராஜ்,திருச்சபையின் செயலாளர் பாக்கிய செல்வன்,பொருளாளர் காட்வின் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆல்வின்,ஜெப கிங்,எவன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *