மத்திய அரசின் புதிய உத்தரவால் புதுவை சாலை போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் 15 ஆண்டுகளை கடந்துள்ள பேருந்துகள் தற்போது நிறுத்திவைக்கபட்டுள்ளன.
கடந்த 2021 ஏப்ரலில் புதிய வாகன அழிப்பு கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள தனிநபர் வாகனங்கள்; 15 ஆண்டுகளுக்கு மேலான வணிக பயன்பாட்டு வாகனங்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக மாநில அரசு யூனியன் பிரதேசங்களுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான பஸ்கள் இதர வாகனங்களை 2023 ஏப். 1க்கு பின் இயக்க மத்திய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் புதுவை சாலை போக்குவரத்து துறைக்கு சொந்தமான 130 பேருந்துகள் இயங்கின. இவை படிப்படியாக இயங்குவது நிறுத்தி தற்போது 50 பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்தன.
இந்நிலையில் மத்தியஅரசின் உத்தரவை பின்பற்றி ஆா.டி.ஓ 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகளை நிறுத்த உத்தரவுயிட்டுள்ளது.
இதன் படி புதுவை -திருப்பதி- குமுளி பேருந்துகள் புதுவை -காரைக்கால், காரைக்கால் -கோவை பேருந்துகள் என மொத்தம் 22 பேருந்துகள் நிறு 35 தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் கோடை விடுறையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.