பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

ஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் ஊராட்சி சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், துர்க்கை அம்மன் ஆலய 31 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம், அக்கினி கொப்பரை,பால்குடம், அலகு காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனை மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதாலட்சுமிபுரம் நாட்டாண்மைகள்,கிராமவாசிகள், இளைஞர்கள் செய்திருந்தனர் இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *