கிருஷ்ணகிரி
மாவட்டம், போச்சம்பள்ளி வார சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 8 கோடி ரூபாய்க்கு ஆடு மாடுகள் மற்றும் கோழிகள் விற்பனையாகின வருகின்ற பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்,இந்த சந்தை தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக உள்ள போச்சம்பள்ளி வார சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை நடைபெறுகிறது மாடுகள் மற்றும் ஆடு விற்பனைக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு, 7 ஆயிரம் ரூபாய் வரையும், 15 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் வரையும், ஆட்டுக்கிடாய் அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக, கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட கர்நாடகா, ஆந்திரா மாநில வியாபாரிகளும் வந்திருந்தனர்.
இந்த வார சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். விலை கூடுதலாக விற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.