திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அம்மையப்பன் வரை குண்டும் குழியுமாக படு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாக இருப்பதாகவும் ஆட்சியர் அலுவலகம் நீதிமன்றம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு இந்த சாலையை கடந்த செல்வது செல்ல வேண்டி இருப்பதால் உடனடியாக இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வந்திருந்தனர்.அவர்கள் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.