விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி மயிலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பாதுகாப்புலியூர் கிராமத்தில் நடைபெற்றது.
கலைஞர் திடலில் நடைபெற்ற இப்போது கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும் மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும்,மாநில தீர்மானக் குழு உறுப்பினருமான R.சேதுநாதன் தலைமை தாங்கினார்.மாவட்ட பிரதிநிதி E.சசிகுமார் வரவேற்றார். திமுக தலைமைக் கழக பேச்சாளர் சௌந்தர பாண்டியன் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் மாநிலத் தீர்மானக் குழு துணை தலைவர் டாக்டர் R.மாசிலாமணி,மாவட்ட துணை செயலாளர்கள் S.அருணகிரி, A.ரவிக்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி. ராஜ்,மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் K.S.அன்சாரி முன்னிலை வகித்தனர்.மயிலம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணி துணை செயலாளர் செல்வகுமார் இந்திரா சுரேஷ் பாலசுந்தரம் ஒன்றிய பொருளாளர் ஆறுமுகம் மாவட்ட பிரதிநிதி கோபால கிருஷ்ணன் உட்பட மயிலம் தெற்கு மாவட்ட ஒன்றிய அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மயிலம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தெற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள் திரளானூர் கலந்து கொண்டனர்.இறுதியாக கிளைக் கழகச் செயலாளர் அகில்வாணன் நன்றி கூறினார்.