அலங்காநல்லூர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியினை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ஆ.வெங்கடேசன், கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
அருகில் திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் G.P.ராஜா, அலங்காநல்லூர் திமுக நகர செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு, திமுக நிர்வாகி எல்.சந்திரன் உடற்கல்வி ஆசிரியர் காட்வின், பெரியஊர்சேரி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தான கருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ், வை.கார்த்திக், இளைஞரணி வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.