எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்கள் சீமான் மற்றும் பிலால்தீன் தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் இறுதியாக தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை கூறினார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை கே.கே.நகர் கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற உள்ள கட்சியின் மாநில நிர்வாகிகள் தலைமையில் தென் மண்டல மாவட்ட நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை உள்ள அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்த ஆலோசனை கள் நடத்தப்பட உள்ளது.