தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட துணை செயலாளர் கே. ராஜா தலைமையில் திருத்துறைப்பூண்டி பிஎஸ்ஆர். இல்லத்தில் 13/ 05/ 2023 இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது

கூட்டத்தில் *கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் வை.செல்வராஜ் அரசியல் நிலை குறித்து பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் அ.பாஸ்கர் எதிர்கால கடமைகள் குறித்தும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். தினக்கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும் என வலியுறுத்தி மே 30 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற முற்றுகையில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 200 பேர் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் இரெ. ஞானமோகன் மாவட்ட துணை செயலாளர் எம். நாகராஜன்மாவட்டத் துணைத் தலைவர் என். மகேந்திரன்ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *