தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி 69 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வைத்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ் நாராயணன், தென்திருப்பேரை பேரூராட்சி கழக செயலாளர் ஆறுமுக நயினார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், பிள்ளைவிநாயகம், ஆழ்வை ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பேய்குளம் முத்துராமன், வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணன், சிவகளை கிளைச் செயலாளர் ரமேஷ், கணேசன் முத்துசாமி, சிவகளை பரமசிவம், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், ஆனந்த், ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *