கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல்
கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றார் அவரை நாச்சியார்கோவில் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் விசாரணையில்
அந்த நபர் திருப்பூர் மாவட்டம் மன்னாரை ஜெயலட்சுமி நகர் முதல் தெருவை சேர்ந்த சுருளிராஜன் (வயது54) என்பது தெரியவந் தது. போலீசார் அவரை திருப்பூர் சென்று சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பிரிண்டர், 100, 200, 500 கள்ள ரூபாய் நோட்டுகள், கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.