வாணியம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் அதிகாரிகளுக்குவிபத்துக்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் விபத்தை குறைப்பதில் முன்மாதிரியாக விளங்கும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து அச்செயலை செய்து பொதுமக்களின் விலை மதிப்பற்ற உயிரை இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற அதிரடி வாகன சோதனையில் Cellphone Drive, Tribles, Over Speed, Wrong Root போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய 100 இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *