கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா பகுதியில் மே 13 கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றியடைந்ததை முன்னிட்டு பட்டாசு வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கொண்டாடினர், மகத்தான வெற்றி என்றும் இது ஆரம்பம் என்றும் தொடர்ந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கோஷங்கள் முழங்கி காங்கிரஸின் கர்நாடக மாநில தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சூளகிரி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய ,நகர தலைவர்கள் கலந்து கொண்டு இந்த மகத்தான வெற்றியை சிறப்பாக கொண்டாடினர்