எஸ்.செல்வகுமார் செய்தியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கடவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயக்குமார். இவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் அமைந்துள்ள 25 அடி ஆழமுள்ள கிணற்றில் இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று தவறி விழுந்தது.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அதனை மீட்க முயற்சித்த நிலையில் இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி இரண்டு மணி நேரம் போராடி பசு மாட்டை பாதுகாப்பாக மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர். கிணற்றில் விழுந்து தவித்த பசுமாட்டை துரிதமாக செயல்பட்டு மீட்டுக் கொடுத்த தீயணைப்பு துறை அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *