மண்ணிசைப் பாடல்கள் பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் மண்ணிசைப் பாடல்கள் பயிற்சியை இசைப் பாடகர் பேராசிரியர் தென்னாங்கூர் ரஜினி பங்கேற்று மாணவர்களுக்கு வழங்கினார்.

மேலும் மாணவர்கள் தேசபக்தி உடையவர்களாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்வில் தேசபக்தி பாடல்கள் மற்றும் தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஆசிரியர்கள் க. பூபாலன், வெங்கடேசன், குமரவேல், சந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *