தென்காசியில் பொது மக்கள் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள்

தென்காசியில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் நீர்நிலைகள் வறண்டு வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தென்காசி நகராட்சி தலைவர் ஆர் சாதிர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுபற்றி தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை காலம் துவங்கி விட்டதால் நமக்கு குடிநீர் வழங்குகின்ற நீர்வள ஆதார அமைப்புகளில் குடிநீர் இருப்பு மிக மிக குறைவாக உள்ளது. மேலும் பருவமழையும் சரியான நேரத்தில் பெய்யாத காரணத்தினால் ஏற்கனவே தென்காசி நகராட்சில் அனைத்து வார்டுகளுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்பட்ட குடிநீரையும் தற்போது
சீராக வழங்க இயலவில்லை என்பதனையும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

இதனால் தென்காசி நகராட்சி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் தேவைக்கு தகுந்தவாறு குடிநீரை பயன்படுத்தியும் குடிநீரை வீணாக்காமல் மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் கேட்டுக் கொண்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *