சோழவந்தான்
சோழவந்தான் அருகே வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட கருப்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் முன்பு செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் 10.க்கு மேற்ப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இம்மையத்தின் மேல்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் சேதமாகி இடிந்து விழம் நிலையில் இருந்துள்ளதால்.சில மாதங்களுக்கு முன்பு வட்டார ஒருகிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலரின் ஆலோசனையின்பேரில் குழந்தைகளின் நலன் கருதி அருகில் உள்ள குடிநீர் .சமையல் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி நூலக கட்டிடத்திற்கு குழந்தைகள் மையம் மாற்ற செய்யப்பட்டு தற்போதுவரை செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சேதமான நிலையில் இருந்த அங்கன்வாடி மையக்க ட்டிடத்தின் குள்ளே .உள்ளுர்வாசிகள் சிலர் தங்களுக்கு சொந்தமான. ஆடு மாடுகளை கட்டி வருவதால் மாட்டு தொழவமாக மாறி துர்நாற்றம்ள்ள.வீசி வருகின்றது.
எனவே சேதமான மையக்கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி இதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய. புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்ட. சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து உள்ளனர்.