மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோயில். இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருளவானது சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்த நிலையில் சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகர் உடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளு உண்டியல் காணிக்கைகளை என்னும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் மு.இராமசாமி அவர்கள், இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் கருணாகரன் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வர் கர்ணன் அவர்கள் மற்றும் திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.