சத்தியமூர்த்தி செய்தியாளர் மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பெள்ளாதி கிராமத்தில் சரித்திர புகழ்வாய்ந்த அருள்மிகு கோட்டை ஸ்ரீ கரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலின் திருவிழா ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், இந்நிலையில் கடந்த
30.4. 2023 தேதி அன்று கிராம சாந்தியுடன் திருவிழா துவங்கியது, இதை அடுத்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பொழி எருதுகளை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊர் கவுடர்கள் தலைமையில் தங்கள் ஊரில் இருந்து பொழி எருதுகளை அலங்கரித்து ஊர்வலமாக கரிய காளியம்மன் கோவிலுக்கு மேல தாளங்கள் முழங்க அழைத்து வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி வந்து பொழி எருதுகளுக்கு சிறப்பு பூஜை செய்தபின் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.