எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலக்கொட்டாயமேடு கிராமத்தில் சிலம்பரசன் என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை இயங்கி வருகிறது
இந்தப் பண்ணையில் முதிர்ச்சி அடைந்த இறால்களை பிடிக்கும் பணியில் தாண்டவன்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (20) என்ற இளைஞர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது அங்கே இறால் தண்ணீரை மறு சுழற்சி செய்யும் இயந்திரங்களுக்காக இயங்கிக் கொண்டிருந்த ஜெனரேட்டர் மின் இணைப்பிலிருந்து மின்சாரம் கசிந்து ஹரிஷ் மீது பாய்ந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் தகவல் அறிந்து வந்த புதுப்பட்டினம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் பணியின் போது உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது