வாடிப்பட்டி,
கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவ் காந்தி நினைவு ஜோதி சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் செல்கிறது.
அந்த நினைவு ஜோதிக்கு வாடிப்பட்டியில் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் நூர்முகமது, நகரத் தலைவர்கள் முருகானந்தம், முத்துபாண்டி, வட்டாரத் தலைவர்கள் ஐ.கே.குருநாதன் பழனிவேல், சுப்பாராயல் காந்தி ஆகியோர் முன்னிலையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட நிர்வாகிகள் புதுப்பட்டி ராமமூர்த்தி, ஜெகதீசன், சீனி, முத்து நகர நிர்வாகிகள் அய்யங்காளை, குருசாமி, வைரமணி, சின்னச்சாமி, கமல குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தனிச்சியத்தில் தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் R. சோனைமுத்து தலைமையில் மணிவண்ணன், முருகன், முகமது இலியாஸ், நாராயணன், அபுதாகீர், கிராம கமிட்டி தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டு வரவேற்றனர்.