ஏழை மாணவர்கள் நலச்சங்கம்- மின்னல், அச்சிறுபாக்கம்- புதிய சகாப்தம் அரிமா சங்கம்,காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மின்னல் கிராமத்தில் ஏழை மாணவர்கள் நலச்சங்க அலுவலகத்தில் நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் 45 பேர் கலந்து கொண்டனர்.
34 பேர் (ஆ 14+பெ 20) இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பம்மல் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டனர்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. முகாமிற்கு உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார சேவையில் 14 ஆண்டுகளாக ஏழை மாணவர்கள் நலச்சங்கம்