R.கண்ணன் செய்தியாளர் மணப்பாறை,
மணப்பாறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வடக்கு சேர்பட்டியைச்சேர்ந்த கருப்பையா மகன் பழனிசாமி (37) என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டதாக அவர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ரெங்காச்சிப்பட்டி புரசம்பட்டியைச்சேர்ந்த ராஜ் என்பவரது மகன் மணிகண்டன் (30) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மணிகண்டன் கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தவர் என்றும் இவர் மீது குளித்தலை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.