பொன்னேரி

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசூர் ஊராட்சியில் 19.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை முதல் வர் காணொளி காட்சி முலம் திறந்து வைத்தார். இதனை பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மக்கள் பயன் பாட்டிற்கு துவக்கி வைத்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது அரசூர் ஊராட்சி இந்த ஊராட்சியில் தமிழக அரசு மின் சாரத்துறை சார்பில் சுமார் 19.25 கோடி மதிப்பீட்டில் 110/33-11 கி.வே துணை மின் நிலையம் அமைக்கப் பட்டது.இதனை தமிழ்நாடு முதல மைச்சர் மு க ஸ்டாலின்  நேற்று சென்னையில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துணை மின் நிலைய த்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக் கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலைய வளாகத்தில் நடைபெற் றது இந்நிகழ்ச்சியில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மின்சாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வை பொறி யாளர் சந்திரசேகர், செயற்பொறி யாளர் உதயகுமார், உதவி செயற் பொறியாளர் பன்னீர்செல்வம், பொறியாளர் சரண்ராஜ், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி, ஒன்றிய கவு ன்சிலர் வெற்றி என்கிற ராஜேஷ், அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, தணைத்தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் சுந்தரம், கோகிலா,  மின் துறை ஊழியர்கள் மற்றும் அரசூர் கிராமத்தினர் என பலர் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து சுற்றி உள்ள கிராம பகுதிகளுக்கு மின் தட்டுப் பாடு இல்லாமல் மின்சாரம் வழங் கப்பட இயலும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *