தென்காசியில் மே தினவிழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி சிஐடியு மாவட்டத்தலைவர் அயூப்கான் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் மாரியப்பன், லெனின்குமார், பேராசிரியர் சங்கரி , ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் சலீம் முகம்மது மீரான், வழக்கறிஞர் பன்னீர்செல்வம், கொடிமரம் கிளைச் செயலாளரும் வட்டாரக்குழு உறுப்பினருமான குருசாமி உறுப்பினர் ராமையா, தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் பிஎஸ்என்எல் ராமநாதன் மேலகரம் சின்னராசு மின்வாரிய சிஐடியு சங்கத்தின் கணசேகரன் ,பட்டமுத்துராமகிருஷ்ணன் ராஜேந்திரன் ,கணேசன் இளையராஜாமற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இலஞ்சி பேரூராட்சி அலுவலகம், காசிமேஜர்புரம், குற்றாலம் பேரூராட்சி, மேலகரம் பேரூராட்சி அலுவலக சுகாதாரப் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலகரம் பேரூந்து நிலையத்தில் கட்சியின் கொடியை தூய்மைப்பணியாளர் ராமலட்சுமி கொடியை ஏற்றினார்.இலஞ்சியில் ஆசிரியர் மாரியப்பன், காசிமேஜர் புரத்தில் லெனின்குமார் ,குற்றாலத்தில் குருசாமி, கொடிமரம் கிளையில் சலீம் முகம்மது மீரான் கொடி ஏற்றினர். முடிவில் தென்காசி சிஐடியு மாவட்டத்தலைவர் அயூப்கான் அனைவருக்கும் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *