தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் திறந்து வைத்தார்.
தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி கிழக்கு ஒன்றியம், சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக சார்பில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளர் வே.பண்டாரம் தலைமை வகித்தார். தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகுசுந்தரம் முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து , பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், நுங்கு, தர்ப்பூசணி பழம் போன்றவற்றினை வழங்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி தலைவர் மாரிமுத்து பாண்டியன், தென்காசி ஒன்றிய திமுக பிரதிநிதிகள் கணபதிநாடார், மாசாணம், துரை, இளைஞரணி வெற்றிவேல் பாலகன், வார்டு செயலாளர்கள் முருகையாதேவர், மாரிமுத்து, அய்யப்ப வேளாளர், மாரியப்பன், முத்து பில்டர், தங்கராஜ், பாலகிருஷ்ணன், பால்ராஜ், கணேசன், கசமாடன், துரைமணி நிர்வாகிகள் சிதம்பரதேவர், சண்முகையா, முப்புடாதி தேவர், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த், பரமானந்தம், பாஸ்கர், வேல்முருகன், மதன், பழனிமுருகன், சங்கரசுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுந்தரபாண்டியபுரம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சியில் துணை தலைவருமான வே.பண்டார தேவர் அனைவருக்கும் நன்றி கூறினார்.