கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார் மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்தார் மேலும் புதிதாக தரையில் மேல் புறத்தில் பைப்கள் அமைத்து அப்பகுதி மக்களுக்கு உப்பு நீர் விநியோகம் செய்யப்படுவதை பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் உதவி பொறியாளர் விமல் ராஜ் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.