தினேஷ் குமார் செய்தியாளர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட பாமக சார்பில் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஏ.பி.சிவா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டி.கே.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி, மாநில மகளிரணி தலைவர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு சிறப்பு அழைப்பாளராக பாமகவின் மாநில கொள்கை விளக்கு அணி செயலாளர் பேராசிரியர் செல்வகுமார் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்க வேண்டும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்த வேண்டும், ஒவ்வொரு கிளை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் குட்டிமணி, நகர செயலாளர் முத்தமிழ், ஒன்றிய செயலாளர்கள் சதிஷ் குமார், தமிழரசன், அசோக்குமார், சிவசங்கரன், கோவிந்தராஜ், வீரமணி, மற்றும் பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலு நன்றி கூறினார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *