மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது தொடர்ந்து அம்மன் முலப்பாயுடன் வீதி உலா வருகை நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அச்சம்பட்டி ஸ்ரீ மந்தையம்மன் இளைஞரணி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.