கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கொத்தகோட்டை கிராமத்தில் அமையப்பெற்றுள்ள பெருமாள கோவிலின் உண்டியலை உடைத்து ரொக்கம் ரூ.15,000/- கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மின்டிகிரி கிராம மக்கள் குலதெய்வமாக கருதப்படும் பெருமாளுக்கு கொத்தகோட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். இக்கோவிலில் வாரம்தோரும் வெள்ளிக்கிழமை பூஜைகள் செய்வது வழக்கம்.
இக்கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரொக்கம் மற்றும் கோவில் கதவை உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை உடைத்து அதனுள் இருந்த உண்டியல் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக உள்ள உண்டியல் பணம் தோராயமாக ரூ.15,000/- ரொக்க பணத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளதாக தர்மகர்த்தா கோவிந்தன் தெரிவித்தார். இக்கொள்ளை சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.