கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி விவசாயி இவரது மனைவி கோமதி அங்கம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ஹரிணி (வயது 26), இவர் எல்.கே. ஜி. முதல் 12 -ஆம் வகுப்பு வரை மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கோயமுத்தூரில் அரசு வேளாண்மை கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ், அகாடமியில் பயின்று அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ், தேர்வில் 289 இடத்தில் வெற்றி பெற்று இமாலயா சாதனை படைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும்- மத்தூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஐ.ஏ.எஸ், தேர்வில் வெற்றி பெற்ற ஹரிணியை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எ.செல்லகுமார் எம்பி ஹரிணியின் வீட்டிற்கு நேரில் சென்று இனிப்பு ஊட்டி பாராட்டினார். இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் விக்னேஷ் பாபு, வட்டாரத் தலைவர் மாது, மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், ஆடிட்டர் வடிவேல், கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் மஹபூப் பாஷா, மாவட்ட செயலாளர் வேடியப்பன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *