நாமக்கல்
தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் ஜீன் 6 -ம் தேதி (06.06.2023 ) சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம், நடைபெற உள்ளது என்று இன்று நாமக்கல் கரூர் சாலையில் ஆட்டோ நகரில் உள்ள
தமிழ் நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதன் மாநில தலைவர் சி. தன்ராஜ் தெரிவித்தார்
மேலும் இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆன் லைன் மூலம் வாகனங்களுக்கு வழக்கு பதிவு செய்வதை ரத்து செய்திட வேண்டும்,
மது போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கிட வேண்டும், அதற்காக லாரி உரிமையாளர்களை தண்டிக்க கூடாது,
மணல் லாரிகளுக்கு ஆன் லைன் புக்கிங் செய்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே மணல் பாரம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்றும்
இதில் 2000 பேர்கள் பங்கேற்க உள்ளனர் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சி. தன்ராஜ் தெரிவித்தார்
அப்போது தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்