இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியாளர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி ஊராட்சியில் எடுத்துக்கட்டி பேருந்து நிலையம் அருகில் மற்றும் எதிர் புறத்தில் வடிகால் வாய்க்கால் ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனை தடுக்கும் பொருட்டு ஊராட்சி நிர்வாகம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் உத்தரவின் பெயரில் வாய்க்கால் ஓரங்களில் இரண்டு எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

குப்பைகள் கொட்ட கூடாது என எச்சரித்து அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டு அறிவிப்பு பதாகைகளும் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு கிடந்தது.இதனை அறிந்த எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு பதாகை உடைத்து சேதப்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் அறிவிப்புவதாக உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை பொறையாறு போலீசார் தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *