காஞ்சிபுரம்
பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நுழைவு வாயிலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் ஏற்பாட்டில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், தர்பூசணி, கிர்ணி பழம், அண்ணாச்சி பழம் போன்ற பல்வேறு பழ வகைகள் கொண்ட 20க்கும் மேற்பட்ட சாலை ஓரம் தள்ளுவண்டி கடை போல் பிரமாண்டமாக அமைத்து மாபெரும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இதனை முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி மற்றும் வி.சோமசுந்தரம் வருகை தந்து மாபெரும் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி பொதுமக்களை ஒருவன் பின் ஒருவராக நீண்ட வரிசையில் காத்திருந்து பழ வகைகளை வாங்கி சென்றனர்.

சிறிது நேரத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நின்ற நிலையில் திடீரென பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக உள்ளே புகுந்து தள்ளுவண்டி கடை போல் அமைக்கப்பட்ட பழைய வகைகளை மூட்டை கட்டி பைகளில் கட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அள்ளி சென்றனர்.

ஏராளமான மக்கள் ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பழங்களை அள்ளி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல வகைகள் மட்டுமல்லாமல் ரோஸ் மில்க், பாதாம் மில்க் ஷேக், கரும்புச்சாறு, கிர்ணி பழம் ஜூஸ், கூழ், மோர், குளிர்பானங்கள், ஐஸ் கடை போன்றவை அமைத்து மாபெரும் தண்ணீர் பந்தலை திறந்தது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாநகர பகுதி செயலாளர்கள் பாலாஜி, ஜெயராஜ், கோல்டு ரவி, என் பி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *