திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பணியாற்றி வந்த ஆய்வர்/தக்கார் அ.ரமணி பணி ஓய்வு பெற்றார்.

அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையர் தமிழ்ச்செல்வி, மயிலாடுதுறை இணை ஆணையர் அலுவலக மேலாளர் ஹம்சன், மகாமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஆ. ரமேஷ், ஆலங்குடி குருஸ்தல கண்காணிப்பாளர் அரவிந்தன், திருவாரூர் உதவி ஆணையர் அலுவலக தலமை எழத்தர் அனிஸ், சிறப்பு விருந்தினராக வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் தெட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் பா. சிவநேசன், அஇஅதிமுக நகரச் செயலாளர் சா. குணசேகரன், மாவட்ட பிரதிநிதி எஸ். மூர்த்தி மற்றும் வேளாண்மை துறையின் அலுவலர்கள். மகாமாரியம்மன் கோயில் அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன், மற்றும் வரதராஜன் பேட்டை தெரு வாசிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *