மதுரை மாநகராட்சி
20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தனை ஒதுக்கும் மதுரை மாநகராட்சி ஆணையர்சிம்ரன்ஜித், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் 15 மாதம் ஆகியும் இந்த வார்டிற்கு ஆய்வு பணிகளுக்கு வரவில்லை. அதனால் ஆணையர் – மேயர் வடிவில் உள்ள சோளகாட்டு பொம்மை போன்று செய்து ஆய்வு பணி செய்யும் நூதன போராட்டம் நடத்தினர்.
அப்பகுதி மக்கள் சோளகாட்டு பொம்மையை வரவேற்று வார்டில் உள்ள குறைகளை மனு வழங்கி குறைகளை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.