தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா மட்டையாந்திடலில் எழுந்தருளியுள்ள அம்மாமேடை அருள்மிகு ஶ்ரீ ஈஸ்வரி அம்மன் ஆலய 15 ஆம் ஆண்டு முளைப்பாரி மற்றும் 48 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது.
முன்னதாக சென்ற மாதம் 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கப்பட்டது. சக்தி கரகம், காவடி, பால்குடம் பொய்கை ஆற்று கரையிலிருந்து பக்தர்கள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமத்தில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில் குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் பச்சிலை மருந்து கொடுக்கப்படுகிறது.
திருமண தடை நீங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை, மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாக அம்மனுக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மேலும் பௌர்ணமிதோரும் மாலையில் உலக அமைதிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் பௌர்ணமியாகம் நடைபெற்று வருகிறதாக விழா குழுவினர் தெரிவித்தார்கள்.