கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முருகாளி எஸ்டேட்டில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தவர் முனியப்பன் என்பவரின் மகன் பாலமுருகன் வயது 39 இவரும் இவரது மகன் சூர்யா வயது 12 ஆகிய இருவரும் TN 41 AZ 1686 Honda இருசக்கர வாகனத்தில் முருகாளி எஸ்டேட்டில் இருந்து வால்பாறைக்கு வந்து கொண்டிருந்த போது
பெரியார் நகர் என்ற இடத்தில் டாடா காஃபி நிறுவனத்தை சேர்ந்த
TN 41 AH 6824 என்ற வாகனத்தை சக்தி 38 என்பவர் ஒட்டி வந்த நிலையில் எதிர்பாராத வகையில் இரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு டாடா காஃபி தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து ஷேக்கல்முடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்