பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு இன்று நாமக்கல் அக்ஷயா மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது அதை மத்திய சமூக நலம் மற்றும் அமலாக்கத்துறை இணைய அமைச்சர் ஏ. நாராயணசாமி துவக்கி வைத்தார்
நாமக்கல் மாவட்ட பாஜக மருத்துவ அணி சார்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் இன்று நாமக்கல் சேலம் சாலையில் உள்ள அக்ஷயா மருத்துவமனையில் நடைபெற்றது
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மருத்துவ அணி தலைவர் மருத்துவர் சியாம் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமை மத்திய சமூக நலம் மற்றும் அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி இன்று துவக்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே .பி.ராமலிங்கம் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் என் .பி.சத்தியமூர்த்தி உட்பட பலர் இதில் கலந்து கொண்டார்கள்
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மத்திய அரசு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி கலந்துகொண்டு ஆய்வு செய்தார் இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச. உமா உள்ளிட்ட மாவட்ட அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள்