தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
கிருஷ்ணாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று மாரியம்மன் கோவில் திருவிழா ஊர்கள் பொதுமக்கள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாரியம்மன் கோவில் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, நத்தம், காக்கங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் நடன நாட்டியலயா வெகு விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது