கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளி நீதிமன்றம் வளாகம் முன்பும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லகுமார் எம் பி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் போச்சம்பள்ளி நீதிமன்ற வளாகம் அருகில் அமைக்கப்பட்ட பயணியர்கள் நிழற் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் தொழில் அதிபருமான எஸ்.ஆர்.ரங்கநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன் வரவேற்றார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, உதவி பொறியாளர் அன்புமணி, ஒன்றிய குழு உறுப்பினர் சுகுணா அம்மன் ராஜா, வட்டாரத் தலைவர் மின்டிகிரி ரவி, மத்தூர் வட்டாரத் தலைவர் மாது, முனுசாமி நாயக்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வழக்கறிஞர்கள் அசோக் ,பீமராஜ்,, ஜெயபால் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.