ஜான்பீட்டர் செய்தியாளர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலையத்தில் வைத்து முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் 14 ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பெருவிழா நடைபெற்றது.

இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர்
மு .அப்பாவு தலைமையில்
150 பெண்களுக்கு பொங்கல் பானை, அரிசி , சர்க்கரை , கரும்பு வழங்கப்பட்டு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொங்கல் பொங்கியதும் அனைவரும் குலவையிட்டு ஆரவாரம் செய்தனர். மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 150 நபர்களுக்கு வேஷ்டி, சேலைகள் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சபாநாயகர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, ஊரக, உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுகழக மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *