திருவள்ளூர்
பண்டிகாவனூர் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தென் மண்டல குழாய் பாதைகள் நிறுவனத்தின் அவசர கால ஒத்திகை மற்றும் விழிப்பு ணர்வு முகாம் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஊரா ட்சிஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டிகாவனூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(தென் மண்டல குழாய் பாதை) நிறுவனத் தினத்தனர் அவசரகால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாமை சிறப்பாக நடத்தி காண்பித்தனர்.
இந்த சிறப்பு முகாமில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் மருத்துவக் குழுவினர் மற்றும் இதர அரசு அலுவலர்கள் பங்கேற் றனர் தீக்கட்டுப்பாடு வழிமுறை கள் குறித்து அவசரகால மருத்துவ முதலுதவிகள் குறித்து மற்றும் அதன் தொடர்பான முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக இந்திய ஆயில் நிறு வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்ட குழு எரி வாயு குழாய் பாதை தொடர்பான பேடரிடர் கால ஒத்திகை சிறப்பான முறையில் பொதுமக்கள் முன்னி லையில் நிகழ்த்தி காண்பித்தனர்.
இந்த முகாமில் பண்டி காவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. சதீஷ்குமார், மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் சீனிவாசன், எர்ணாவாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மலர் விழி, நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தவிர பண்டி காவனூர், எர்ண வாக்கம், மற்றும் தர்மாபுரம், கிராம ங்களில் இருந்து சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ் ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அப்போது அவசரக் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விவரித்தனர்.
அதை தொடர்ந்து பேசிய இந்தியா ஆயில் நிறுவனத்தின் முதன்மை மேலாளர் தேவகுமார் எரிவாயு குழாய் பாதையில் இன்றியமையா யும் அதன் பாதுகாப்பின் முக்கியத் தையும் நிறுவனத்தின் பங்களிப் பையும் பற்றி பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவசரக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய ஆயில் தொலைபேசி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்களைக் கொண்ட மஞ்சள்பை பொதுமக்களுக்கு விநியோகிக் கப்பட்டது.