தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;-

தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மல்லிகை ஒரு சிறந்த மலர் பயிர் ஆனால் பூச்சி மொட்டு புழு தாக்குதல் மல்லிகை சாகுபடிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம் (மண்ணைப் பறித்தல், பூச்சிகள் தாக்கிய பூக்களை வாரத்திற்கு ஒரு முறையாவது சேகரித்து அழித்தல், 40 கிராம் கார்போஃபியூரான் மருந்தினை செடி ஒன்றுக்கு மண்ணில் இடுதல், புதர்களை முறையாக கத்தரித்து சுகாதாரமாகப் பராமரித்தல்., முறையான சீரமைப்புக்குப் பிறகு 5% வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கவும் (ஜனவரி மாதத்தில்) பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ்-7 டாப்ஸ் என்ற உயிரி பூச்சிக்கொல்லியை2 கிராம்/1லிட்டர் என்ற வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

பெரோமோன் டிராப்ஸ்என்ற இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு ஐந்து வீதம் மற்றும் லைட் ட்ராப் ஏக்கருக்கு ஒன்று வீதம் வைக்க வேண்டும் மேலும் ஸ்பினோசாட் 0.3 மிலி (3ml/10 லிட்டர் தண்ணீர் மற்றும் தைக்ளோபிரிட்1 மிலி ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதம் இந்த பூச்சிக்கொல்லி மருந்தினை 7 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

தொகுப்பைப் பின்பற்றுவதன் மூலம், சோதனையில் குறைந்த மொட்டு புழு பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது (7.94) சோதனையில் மகசூல் 30.96% அதிகரித்துள்ளது

மேலும் தகவல்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் குருவிகுளம் வட்டார மற்றும் தோட்டக் கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *